Apr 20, 2009

நபி வழித் தொழுகை

இதே கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களுக்கும் அறிவித்து ள்ளார்கள். புகாரீ 192.

நபி(ஸல்) அவர்களின் செயல்முறை விளக்கம் மட்டும்இன்றி வாய் மொழியாகவும் அவர்கள் அனுமதி அளித்ததற்குச் சான்றுகள் உள்ளன.

" உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தால் உளூச் செய்யும் தண்ணீரீல் கையை விடுவதற்க்கு முன் கையைக் கழுவிக்கொள்ளட்டும் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஹுரைரா {ரலி} நூல்:புகாரீ 162
மீதம் வைத்தத் தண்ணீர்
மீதம் வைத்த தண்ணீர் பெண்கள் உளூச்செய்து மீதம் வைத்த தண்ணீரீல் ஆண்களும், ஆண்கள் மீதம் வைத்த தண்ணீரில் பெண்களும் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை தவறாகும்.

"கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது நானும், நபி (ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் குளித்திருக்கின்றோம்" என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள் நூல்: புகாரீ 263

இன்ஷா அல்லாஹ் தொடரும்...............

0 வாழ்த்துக்கள்: