May 30, 2009

நபிவழித் தொழுகை

வீட்டில் உளூச் செய்தல்
   
    வீட்டில் செய்ய வசதி வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டில் உளூச் செய்து விட்டுப் புறப்படுவதே சிறந்ததாகும். ஒருவர் உளூச் செய்த நிலையில் பள்ளிவாசலுக்குச் சென்றால் அவர் நடந்து செல்வது கூட வணக்கமாகக் கருதப்படும்.

''ஒருவர் தமது வீட்டிலும்,கடை வீதியிலும் தொழுவதை விட ஜமா அத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து  மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூச் செய்து ,அதை அழகுறச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால்அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஏட்டுக்கும் அவருக்கு ஒரு படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகின்றான். ஒரு பாவத்தை அவரை விட்டும் நீக்குகின்றான். தொழுகையை எதிர்பார்த்து அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும் போது அவர் தொழுபவராகவே கருதப்படுவார். தொழுதஇடத்திலேயே அவர் இருக்கும்வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்குத் தொல்லை  அளிக்காத வரையில் 'இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா! இவருக்கு அருள்  புரி! என்று வானவர்கள் கூறுகின்றனர்" என நபி{ஸல்} அவர்கள் கூறினார்கள்.

          அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)
              நூல்கள்: புகாரீ 477,முஸ்லிம் 1174.

   இன்ஷா அல்லாஹ் தொடரும்......................................................  

May 16, 2009

சூடாக்க ப்பட்ட தண்ணீர்

             சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும், வெந்நீரிலும் உளூச் செய்யக்கூடாது என்று சிலர் நம்புகின்றார்.


     சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட தண்ணீரை நபி(ஸல்) தடுத்ததாகவும் அதனால் குஷ்ட நோய்  வரும் என்று நபி (ஸல்) கூறியதாகவும் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் நபி (ஸல்) அவர்களின் பெயரால் 
எடுக்கப்பட்டவையாகும். 


 காலித் பின் இஸ்மையில், வஹப் பின் வஹப் ,  ஹைஸம் பின் அதீ போன்றோர் தான் இது பற்றிய ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். இவர்கள் பெரும் பொய்யர்களும். ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர்களுமாவர்.
 

 எனவே சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும் உளூச் செய்ய எந்தத் தடையும் இல்லை.
   தொடரும்..............................

Apr 30, 2009

நபிவழித் தொழுகை

வீட்டுப் பிராணிகள் வாய் வைத்த தண்ணீர்

                           மனிதர்களை ஆண்டி வாழும் கோழி,சிட்டுக்குருவி,காகம்,பூனை போன்ற பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்யக்கூடாது  என்று சிலர் நம்புகின்றனர் இதுவும் தவறாகும்.

அபூகதாதா(ரலி) அவர்கள் உளூச்செய்வதற்க்காக நான் தண்ணீர் வைத்தேன். உடனே ஒரு பூனை வந்து அதைக்குடிக்க ஆரம்பித்தது. பூனை குடிப்பதற்க்கு ஏற்றவாறு பாத்திரத்தை அவர் சாய்த்தார் "என் சகோதரர் மகளே! இதில் ஆச்சிரியப்படுகிறாயா?" என்று கேட்டார். நான் ஆம் என்றேன் "இவை அசுத்தம் இல்லை. இவை உங்களை சுற்றி வரக்கூடியவையாகும். " என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்.
                         
  அறிவிப்பவர்:கப்ஷா
                  நூல்கள்:திர்மிதி 85, நஸயீ 67,    அபூதாவூத் 68

பூனை வாய் வைத்தால் தண்ணீர் அசுத்தமாகாது என்பதும். அத்தண்ணீரீல் உளூச் செய்யலாம் என்பதும் இதிலிருந்து தெரிகின்றது. மேலும் ''இவை உங்களைச் சுற்றி  வரக் கூடிய பிராணிகள்" என்ற வாக்கியம். காட்டில் வசிக்காமல் வீட்டைச் சுற்றி வரும் பிராணிகள் அனைத்துக்கும் பொருத்தம் என்பதை விளக்குகின்றது. இன்ஷா அல்லாஹ் தொடரும்.......................................

Apr 20, 2009

நபி வழித் தொழுகை

இதே கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களுக்கும் அறிவித்து ள்ளார்கள். புகாரீ 192.

நபி(ஸல்) அவர்களின் செயல்முறை விளக்கம் மட்டும்இன்றி வாய் மொழியாகவும் அவர்கள் அனுமதி அளித்ததற்குச் சான்றுகள் உள்ளன.

" உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தால் உளூச் செய்யும் தண்ணீரீல் கையை விடுவதற்க்கு முன் கையைக் கழுவிக்கொள்ளட்டும் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஹுரைரா {ரலி} நூல்:புகாரீ 162
மீதம் வைத்தத் தண்ணீர்
மீதம் வைத்த தண்ணீர் பெண்கள் உளூச்செய்து மீதம் வைத்த தண்ணீரீல் ஆண்களும், ஆண்கள் மீதம் வைத்த தண்ணீரில் பெண்களும் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை தவறாகும்.

"கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது நானும், நபி (ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் குளித்திருக்கின்றோம்" என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள் நூல்: புகாரீ 263

இன்ஷா அல்லாஹ் தொடரும்...............

Mar 24, 2009

தொழுகை

தண்ணீர்
உளூச் செய்வதற்க்கு தண்ணீர் அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!ஆயினும் ஊளூச் செய்யும் தண்ணீர் குறித்து தவறான நம்பிக்கைகள் சில முஸ்லிம்களிடம் நிலவுகின்றன.

ஆறு, குளம், கிணறு ஆகியவற்றிலும் உளூச்செய்யலாம். இவற்றுக்கு ஆதாரம் காட்டத் தேவயில்லை.
கடல் நீர்
கடல் நீரால் ஊளூச் செய்யக்கூடாது என்ற கருத்து சிலரிடம் காணப்படுகின்றது.
''கடல் நீரில் அதிக அளவில் உப்பு கலந்திருப்பதால் ஆது தண்ணீரீன் கணக்கில் சேராது்" என்று அவர்கள் நினைக்கின்றனர். இது தவறாகும்.
ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் நீரால் உளூச் செய்ய அனுமதியளித்துள்ளனர்.
எனவே கடல் நீரால் தாராளமாக உளூச் செய்யலாம். கடமையான குளிப்பு உட்பட அனைத்துக் குளிப்புகளையும் நிறைவேற்றலாம்.

பயன்படுத்திய தண்ணீர்
"சிறிய பாத்திரங்களில் உளூச் செய்யும் போது தண்ணீர் அப்பாத்திரத்தில் தெறித்து விட்டால் அத்தண்ணீர் அசுத்தமாகி விடும்" என்ற நம்பிக்கை சிலரிடம் காணப்படுகின்றது. சில மத்ஹபுகளிலும் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. மேலும் சிறிய பாத்திரத்தில் கைகளை நுழைத்துத் தண்ணீரை எடுத்தால் அத்தண்ணீர் உளூச் செய்வதற்கான தகுதியை இழந்து விடும் எனவும் நம்புகின்றனர்.

உஸ்மான் (ரலி) அவர்கள் மணிக்கட்டு வரை கழுவிய பின் பாத்திரத்தில் கை விட்டு தண்ணீர் எடுத்துள்ளனர். அதன் மூலம் மற்ற உறுப்புகளைக் கழுவியுள்ளனர். இறுதியில் இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்து காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்......................................................................................

Mar 5, 2009

நபி வழித் தொழுகை

தொழுகைக்கு நபியே முன் மாதிரி

 ஒர் ஊரில் ஒரு பள்ளிவாசலில் தொழக் கூடியவர்களை கவனித்தல் ஒருவரின் தொழுகைக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசங்கள் இருப்பதைக்காணலாம். நபிகளார் காட்டித்தந்த முறையில் எவ்வாறு தொழுவது என்பது பற்றிய அறியாமையே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

''என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!" என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
   அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ்(ரலி)
நூல்:புகாரீ 631. 

இந்த நபிமொழியின் படி நாம் எவ்வாறு தொழவேண்டும் என்பதை நபிகளார்  காட்டித் தந்த அடிப்படையில் அறிந்துகொள்வோம். 

உளூவின் சட்டங்கள்

தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் குறிபிட்ட உறுப்புக்களைக் கழுவி தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை 'உளூ' எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால்  தொழுகை நிறைவேறாது. 

          நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும் மூட்டுக்கள் வரை உங்கள்  கைகளையும், கரண்டை வரை உங்கள் காள்களையும் களுவிக் கொள்ளூங்கள்! உங்கள் தலையை ஈரக் கையால்அதடவிக் கொள்ளுங்கள்!  குளிப்பு கடமையானோராக இருந்தால் குளித்து தூய்மையாகிக் கொள்ளுங்கள்! 
                                       அல்குர்ஆன்:5:6
 
"உளூ நீங்கியவர் உளூச் செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரீ 135, முஸ்லீம் . இன்ஷா அல்லாஹ் தொடரும்.....

Feb 22, 2009

Two friends
 once there lived in a town a blind man, called das and a lame man called ali. one day, das went to the market. He came to a busy road. He wanted someone to help him. ali was near by. das asked ali to  help him. ali said,''i am sorry, i am lame man. i cannot walk. how can i help you?''

  Then das thought of a clever idea. He said to ali,''you cannot walk. I cannot see. let us help each other. i shall carry you. you show me tha way." ali readily agreed. das took ali on his back. ali showed  him the way. they crossed the road safely. They  became good friends. Afterwards they to many places.
       END